9/13/2022

’தந்தை பெரியார்’ இணைய வழி போட்டி



ரூ.17,500 மதிப்பிலான புத்தகப் பரிசுகள்

# தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 (சமூக நீதி நாள்) துவங்கி, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை போட்டி நடைபெறும்.

# தந்தை பெரியார் குறித்த 10 கேள்விகளுக்கு இரண்டு நிமிடங்களில் விடையளிக்க வேண்டும்.

# சிறுவர் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் போட்டியில் பங்கேற்கலாம். ஒருவர் ஒருமுறைதான் பங்கேற்க இயலும்.

# அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடையளிக்கும் 5 நபர்களுக்கு தினமும் ரூ. 250/ மதிப்பிலான நூல்கள் பரிசாக வழங்கப்படும். 14 நாட்களில் 70 பேருக்கு பரிசுகள் வழங்கப்படும்.

# குறைந்தபட்சம்  ஒரு கேள்விக்கு சரியாக விடையளிக்கும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் மின்னஞ்சலில் உடனடியாக அனுப்பப்படும்.

# தினமும் பரிசுக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களின் பட்டியல் இதே இணைய பக்கத்தில் பதிவிடப்படும். 


 போட்டியில் பங்கேற்க....


கீழுள்ள கியூ.ஆர் கோடினை ஸ்கேன் செய்து பங்கேற்கலாம்....

கீழுள்ள இணைப்பின் வழியாகச் சென்று பங்கேற்கலாம்...



போட்டி துவங்கும் நாள் : செப்டம்பர் 17 - சமூக நீதி நாள் (தந்தை பெரியார் பிறந்த தினம்) 
இறுதி நாள் : செப்டம்பர் 30 

தினமும் இரவு 8:30 மணி வரை பங்கேற்கும் போட்டியாளர்களில் 100 மதிப்பெண் பெறுபவர்களை தனியே பிரித்து, அதில் ஐவரை குலுக்கல் மூலம் தேர்வு செய்து மறுநாள் அறிவிக்கப்படும். இரவு 8:30 மணிக்கு மேல் பங்கேற்பவர்கள் மறுநாள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.